பொன்னேரி நகராட்சியில் இரு இடங்களில் பூங்காக்கள் திறப்பு

L.குமார்

UPDATED: May 22, 2023, 4:52:05 AM

பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட இரு இடங்களில் கலைஞர் நகர்  புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1. 64 கோடியில் அமைக்கப்பட்ட பூங்கா க்கள் திறந்து வைக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட 17 வது வார்டு சக்தி நகர், மற்றும் 6 வது வார்டு பாலாஜி நகர், ஆகிய பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட் டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்க ப்பட்டன.

அதன்படி சக்தி நகரில் 97 லட்சம் மதிப்பீட்டிலும் பாலாஜி நகரில் 67 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் 1.64 கோடி மதிப்பீட்டில் இரு இடங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டன.

இத் திறப்பு நிகழ்ச்சியில் பொன் னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், துணைத் தலைவர் வக்கீல் விஜய குமார்,நகராட்சி ஆணையர் கோபிநாத், ஒப்பந்தகாரரும் முன்னாள் கவுன்சிலருமான ஜோதிஸ்வரன், மற்றும் வார்டு கவுன்சிலர் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

VIDEOS

RELATED NEWS

Recommended