- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நெல்லிக்குப்பம் அருகே இரு சக்கர சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
நெல்லிக்குப்பம் அருகே இரு சக்கர சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
குமரவேல்
UPDATED: May 31, 2023, 6:24:37 PM
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல் பட்டாம் பாக்கம் செக்போஸ்ட் சாலையில் உள்ள தனியார் ஆயில் மில் அருகே 31.5.2023 மாலை 5.15 மணிக்கு பட்டாம்பாக்கம் செக் போஸ்ட் மார்க்கத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் பண்ருட்டி திருவதிகை அடுத்த செட்டி பட்டறை காலணி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவராஜ் மகன் முத்தமிழ் (33) என்பவரும்,
மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலையிலிருந்து செக்போஸ்ட் மார்க்கமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பண்ருட்டியை அடுத்த மாளிகைமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் அருண் பிரசாத் என்பவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முத்தமிழ் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தாக தெரிகிறது.
அருண் பிரசாத் என்பவர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்படி விபத்து தொடர்பாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.