• முகப்பு
  • district
  • சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்யும் நிறுவனத்தின் கன்வேயர் பெல்ட்டில் அடிப்பட்டு வட இந்திய தொழிலாளி உயிரிழப்பு.

சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்யும் நிறுவனத்தின் கன்வேயர் பெல்ட்டில் அடிப்பட்டு வட இந்திய தொழிலாளி உயிரிழப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமர்பூர் தோகார் பகுதியைச் சேர்ந்த பிரிஜு (31,) கடந்த ஒருஆண்டாக கும்பகோணம் அருகிலுள்ள அசூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சிமென்ட் கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் . இன்று காலை சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்வதற்காக பிரிஜு வேலை பார்க்கும் போது கலவை இயந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் அடி பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சம்பவ பிரிஜு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சுவாமிமலை காவல் நிலையத்திற்கு புகார் வரவே, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் பிரிஜு புஜ்காரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended