- முகப்பு
- மாலை 5 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்த செய்திகள்.
மாலை 5 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்த செய்திகள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருப்பத்தூர் :
ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய விவகாரத்தில் மேலும் 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாதனூர் அரசு பள்ளியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
தாவரவியல் ரெக்கார்ட் நோட் சமர்பிக்காமல் பாய் போட்டு வகுப்பறையிலேயே மாணவர் தூங்கியுள்ளார். தட்டிக்கேட்ட தாவரவியல் ஆசிரியர் சஞ்சயை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த வீடியோ வைரலாகியது.
தென்காசி :
கீழப்புலியூர் அருகே சைக்கிளில் பள்ளிக்கு சென்ற 6-ம் வகுப்பு மாணவி பேருந்து மோதி படுகாயமடைந்தார். படுகாயமடைந்த மாணவி தன்ஷிகா சிகிச்சைக்காக தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விருதுநகர் :
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக மேலாளர் ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் :
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் மாடியில் உள்ள வட்ட வழங்கல் பிரிவிற்கு செல்ல மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். கீழ்தளத்தில் அமைக்க கோரிக்கை
கோவையில் :
தடை செய்யப்பட்ட 1 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் :
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற147 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.36.75 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கறிஞர் உட்பட 4 பேரை தனிப்படை போலீஸ் கைது செய்தது.
மதுரை மாவட்டம் :
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கார், துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் :
ரூ.1 லட்சத்திற்கு ஆசைப்பட்டு தங்கம் கடத்தும் கும்பலிடம் சிக்கி தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் 45 நாட்கள் சித்திரவதை அனுபவித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் :
பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மருந்து குடோனில் வைக்கப்பட்ட மருந்துகள் மழையில் நனைந்தது. பழமை வாய்ந்த நூலகம் மருந்து குடோனாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மழையில் நனைந்தது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருந்துகள் சேமித்து வைக்கப்பட்ட நிலையில் நனைந்தது.
கோவை : பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இரு குட்டிகளை ஈன்றுள்ள காட்டு யானை. அரிதான நிகழ்வு என வன ஆர்வலர்கள் தகவல்.
இன்றைய மாவட்ட செய்திகள் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvannamalai news,crime news,Latest tamil news,Breaking tamil news,District news,