• முகப்பு
  • அரசியல்
  • செய்யாறு நகர அதிமுக சார்பில் திருவத்தூரில் புதிய உறுப்பினர் சேர்க்கை !

செய்யாறு நகர அதிமுக சார்பில் திருவத்தூரில் புதிய உறுப்பினர் சேர்க்கை !

வாசுதேவன்

UPDATED: May 31, 2023, 11:16:14 AM

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து கூட்டம் நேற்று மாலை நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது அதிமுகவில் அதிகப்படியான புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறுவதற்கு கடுமையாக பாடுபட வேண்டும் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஜாகீர்உசேன், நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட நிர்வாகிகள் ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், டி.பி.துரை, என்.ரகு, ரமேஷ், கந்தசாமி, மகாதேவன், இளையராஜா, கன்னியப்பன், அருண்குமார், தணிகாசலம், சுரேஷ், எழில், ராஜ், சக்தி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended