• முகப்பு
  • crime
  • சிதம்பரத்தில்  குழந்தை திருமணம் செய்து வைத்த நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்கு.

சிதம்பரத்தில்  குழந்தை திருமணம் செய்து வைத்த நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்கு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சிவராமன் மகன் கபிலன் இவருக்கும் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 3-ஆம் தேதி கீழவீதி எம்.எஸ் திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றதாகவும். அதனையொட்டி கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் விருந்தோம்பல் நடைபெற்றதாகவும்  சமூகநலத்துறை அலுவலர் சித்ரா சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சிதம்பரம் நகர காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு குழந்தை திருமணம் நடைபெற்றது குறித்து நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிவராமன், சோ.பானுசேகர், கபிலன், எம்.எஸ் திருமண மண்டபம் உரிமையாளர் ஆகியோர் மீது ஜூன் 20-ஆம் தேதி இரவு  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தைகள் திருமணத்தை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  இது போன்ற குழந்தைகள் திருமணத்தை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வழக்கை மட்டும் பதிவு செய்யாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து பொதுநல அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended