• முகப்பு
  • அரசியல்
  • அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்தது.

அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்தது.

முத்தையா

UPDATED: May 15, 2023, 11:34:22 AM

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் இது நாள் வரையிலும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் எல்லாம் பெரும் கண்துடைப்பா? என்று கேள்வி கேட்டு வெண்ணந்தூர் பேரூராட்சியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் சிறுத்தைகள் கட்சி நாமக்கல் மாவட்ட பிரிவின் சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் தலைவர் சு. அகத்தியன் தலைமை தாங்கினார் மேலும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended