• முகப்பு
  • crime
  • கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மர்ம மரணம்.

கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மர்ம மரணம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இரண்டாவது நாளாக மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் - பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு உங்கள் மகள் செத்துதாமா வந்துச்சு என மருத்துவர் கூறியதாகவும்,ஸ்ரீ மதியின் கை,கால்,முகத்தில் எங்குமே காயம் இல்லை என்றும் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் குற்றச்சாட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீ மதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பள்ளி மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக போலிசார் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீ மதி போல் ஐந்திற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மர்மமுறையில் உயிரிழந்ததாக கூறப்படும் கனியாமூர் தனியார் பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் உறவினர்களை விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு பள்ளி மாணவியின் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீ மதி போல 5-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தத்திற்கு காரணமான கனியாமூர் தனியார் பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும்,பள்ளி மாணவியின் மரணத்தில் பல்வேறு விதமான மர்மங்கள் இருப்பதாகவும்,பள்ளி மாணவி இறப்பு குறித்து தாமதமாக தங்களுக்கு தெரிவித்ததாகவும் கூறி பள்ளி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்படும் என்றும்,பிரேத பரிசோதனையின் போது உறவினர் ஒருவர் உடன் இருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை முடிவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்ததை எடுத்து போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீமதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் காவல்துறை மூலம் வீடியோ பதிவும் செய்யப்பட்டது இந்த நிலையில் பள்ளி மாணவி ஸ்ரீ மதியின் மர்ம மரணத்திற்கு காரணமான தனியார் பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும், பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மறுத்து விட்டனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...பிரேத பரிசோதனையின் முடிவில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பு ; விசூவல் மற்றும் பள்ளி மாணவியின் தாயாரின் வைரல் வீடியோ FTP-ல் அனுப்பப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended