சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் கொலை கொள்ளை பொதுமக்கள் அச்சம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பரங்கிப்பேட்டை அருகே உள்ள பஞ்சங்குப்பம் அருகில் இரயில் நிலையம் உள்ளது இங்கு பேருந்து நிழல் குடை அமந்துள்ளது .
இதில் நேற்று மழைக்கு ஒதுங்கிய மீன் வியாபாரியை மர்ம நபர்கள் மிளகாய்த்தூள் தூவி அவரை கடத்திச் சென்றார்கள்.
இதனை அறிந்த பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் யார் எந்த ஊர் என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.