• முகப்பு
  • குற்றம்
  • நிலத்தகராறில் திமுக பிரமுகர் விவசாயி மீது கொலைவெறி தாக்குதல்!

நிலத்தகராறில் திமுக பிரமுகர் விவசாயி மீது கொலைவெறி தாக்குதல்!

வாசுதேவன்

UPDATED: May 25, 2023, 10:14:32 AM

வேறு ஒருவரின் நிலத்தை தனக்கே எழுதிக் கொடுக்கச் சொல்லி மிரட்டி பணிய வைக்கும் நோக்கில் திமுக பிரமுகர் தாக்குதல் நடத்தியதில் விவசாயி பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, தேவி செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரகுமார். இவர் அதே பகுதியில் கடந்த ஆண்டு நான்கு ஏக்கர் 84 சென்ட் இடம் ஒன்றை வாங்கி உள்ளார்.

அந்த இடத்தை தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் பிரேம் ஜோதியின் கணவர், திமுக ஒன்றிய அவைத் தலைவராக இருந்து வரும் மணிமாறன் என்பவர் இந்திரகுமாரை அணுகி இந்த இடத்தை தனக்கு பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார்.

இந்தநிலையில் அந்த இடத்தை தர மறுத்த இந்திரகுமாரை நான் ஆளும் கட்சியில் இருக்கிறேன். என்னை எதிர்த்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பது போன்ற தோரணையில் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார்.

இடத்தை தர மறுத்த இந்திரகுமாரை கரடிகுடி இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வெளியே வந்த அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சராசரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தலையில் வெட்டு காயம் ஏற்பட்ட இந்திரகுமார் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை ஆளுங்கட்சி பிரமுகரான மணிமாறன் என்பவரை அழைத்து விசாரணை கூட செய்யவில்லை என இந்திரகுமார் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் விசாரித்ததில் மணிமாறன் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல் அளித்தனர்.

திமுக பிரமுகர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார் அவர் மீது இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என பாதிக்கப்பட்ட இந்திரகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இந்த வழக்கில் மணிமாறனை கைது செய்ய நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIDEOS

RELATED NEWS

Recommended