கொலையை மறைத்து நாடகமாடிய கொலை காரன்.!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் சின்னசாமி தோட்டத்தில் பணிபுரிந்த மணிகண்டன், மனைவி கார்த்திகா, செல்வம் ஆகியோர் தோட்டத்தில் பணிபுரிந்து வந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருவரும் 300 ரூபாய் காணவில்லை என்று சண்டை நடந்த நிலையில் செல்வம் என்பவருக்கு தலையில் பலத்த காயமடைந்தார். அவரை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர் தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியநிலையில் அன்று இரவில் மீண்டும் தோட்டத்திற்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார் மணிகண்டன். காலையில் செல்வம் மரணம் அடைந்துள்ளார் என்பது தெரிய வந்தநிலையில் உத்தமபாளையம் காவல் துறை வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கொலையாளி மணிகண்டன் காவல்துறை அதிகாரிகளிடம் செல்வம் தவறி விழுந்ததாக நாடகமாடினார். தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே மற்றும் உத்தமபாளையம் காவல்துனைக் கண்காணிப்பாளர் செல்வி ஸ்ரேயா குப்தா அறிவுரையின்படி மிகத் துரிதமாக செயல்பட்டு உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் க.சிலைமணி தோட்டத்திற்குள் இருந்த இரத்த கறையை துருப்பாக கொண்டு மணிகண்டனிடம் கிடுக்குபிடி விசாரணையில் அடித்து கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார் . அதனைத் தொடர்ந்து கொலையாளி கைது செய்யப்பட்டு உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மிக விரைவாக செயல்பட்டு கொலையாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டதை தேனி மக்கள் பாராட்டினர். தேனி மாவட்ட செய்தியாளர். MP. ஜீவா

VIDEOS

RELATED NEWS

Recommended