இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் பிவிஆர் சினிமா திரையரங்கம் திறப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Feb 2, 2023, 5:52:10 AM
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுது போக்கிற்காக 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகங்கள், 5 திரையரங்குகள், ஓட்டல்கள்,கடைகள் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடைந்து விட்டன.
இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்த கூடிய கார் பார்க்கிங் கட்டிடம் பயன் பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் விமானத்திற்க்கு காத்து இருக்கும் பயணிகள், டிரான்ஸிட் பயணம் மேற்கொள்பவர்களின் பொழுது போக்கிற்க்காக இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் 5 திரைகள் கொண்ட PVR திரையரங்கம் இன்று துவக்கப்பட்டது.
இதனை நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
மேலும் நடன நிகழ்சிகள்,புதிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டு காட்சி படுத்தப்பட்டன.
சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட்ட இணைப்புப் பாலம் வழியாக திரையரங்கை அடையலாம்.
ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் ஒரே நேரத்தில் 1000 பேர் படம் பார்க்கலாம்.
இந்த வளாகத்தில் ஏற்கனவே கட்டி முடிக்கப்படுள்ள உணவு விடுதிகள், கடைகள் உள்ளிட்டவற்றை திறக்கப்பட உள்ளன.
இதனால் விமானநிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு பொழுது போக்கிற்க்கு பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவிலேயே சென்னை விமான நிலையத்தில் தான் முன்முறையாக விமான பயணிகளின் பொழுது போக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமிகாந்த்.