MSC REGINA சரக்கு கப்பல் இலங்கை செல்லாமல் தூத்துக்குடி தவந்தது. காரணம் ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இலங்கையில் பல்வேறு இடங்களில் தொடர் வன் முறை ஏற்பட்டதை அடுத்து அனைத்து ரயில்களும் ரத்து செய்யப் படுவதாக இலங்கை ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் மறு உத்தரவு வரும் வரை இன்று இயக்கப்பட்டு வரும் ரயில்கள் அந்தந்த இடங்கள் வரை மட்டும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 4 ஆயிரம் கண்டெய்னர்களுடன் கானா நாட்டின் தேமா துறை முகத்திலிருந்து கடந்த மாதம் ஏப்ரல் 20 ஆம் தேதி கிளம்பிய MSC REGINA சரக்கு கப்பல் இலங்கை செல்லவிருந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக, இலங்கை செல்லாமல் இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு வந்தடைந்தது.
செய்தியாளர் பா. கணேசன்.