• முகப்பு
  • அரசியல்
  • வடபாதிமங்கலத்தில் நடைபெற்ற இரண்டாண்டு திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வடபாதிமங்கலத்தில் நடைபெற்ற இரண்டாண்டு திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இளவரசன்

UPDATED: May 9, 2023, 11:53:41 AM

தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் பொருட்டு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றியம் நகரம் மாவட்டம் என அனைத்து பகுதிகளிலும் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்கிற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வடபாதிமங்கலத்தில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழகச் செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமைக் கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய தலைமைக் கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா திராவிட மாடல் அரசு இலவசங்களை கொடுத்து மக்களை கெடுக்கிறது என்று கூறிவிட்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு நாள் ஒன்றுக்கு அரை லிட்டர் பால் இலவசமாக தருகிறோம் என்று கூறுகிறது என்று பேசினார்.

மேலும் இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு மக்களுக்கு செய்துள்ள நன்மைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.இதில் வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

மேலும் புனவாசல் உச்சிவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

VIDEOS

RELATED NEWS

Recommended