ஐந்து பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில்.

சுரேஷ்பாபு

UPDATED: May 12, 2023, 7:50:13 PM

திமுக அரசியலில் தொடர்ந்து நிலவி வரும் ஓஎல் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியில் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மணி மற்றும் வேல்ராஜ் ஏற்படுத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மணி உரையாற்றும் போது நிதி அமைச்சர் வி டி ஆர் பழனிவேல் ஆடியோவில் சுமார் 30,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்த நிலையில் சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும் மணல் மற்றும் கனிம வளம் கொள்ளையை இயற்கை வளங்களை சுரண்டல் சட்டம் வாபஸ் பெற வேண்டும்,

ஏடிஎம் மது விற்பனை டாஸ்மாக் தடை செய்ய மற்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கட்சியின் நகரச் செயலாளர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended