கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி மாணவருக்கு பார்சல் மூலமாக போதை மாத்திரைகளை சப்ளை செய்து அவரது உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த மருந்தக உரிமையாளர் முகமது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் ஹாஜியார் தெருவில் உள்ள விஆர்எஸ் காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள சிரின் மெடிக்கல் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வரும் முகமது பஷீர், இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவருக்கு பார்சல் மூலமாக போதை மாத்திரைகளை தொடர்ந்து சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவனின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த முகமது பஷீரை
கோயம்புத்தூர் காவல்துறையினர் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மருந்தக உரிமையாளர் சட்டவிரோதமாக பார்சல் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.