17.32லட்சம் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடதத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதி திருப்பனந்தாள் அருகே மனக்குண்ணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 17.32லட்சம் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தின் கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது எனவும் அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கள்வித்துறைக்கு தான் முதலமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் அந்த வகையில் பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவ மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
ஆன்மீக திருக்கோயில் வழியாக அறிவு திருக்கோயிலை திறக்கும் இந்நிகழ்வு மிகுந்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறினார். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.