எம்ஜிஆரின் பேரன் அதிரடி அறிவிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை ராமாபுரத்தில் முன்னாள்முதல்வர் எம்ஜிஆர் வீட்டில் அவரதுபேரனும் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளருமான ஜூனியர்எம்ஜிஆர் செய்தியாளர்களைச்சந்தித்தார்.  அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சென்று கொண்டு உள்ள நிலையில் அதுசம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ‘எம்ஜிஆர் வேர்வை சிந்தி உழைத்து உருவாக்கியகட்சி இது. அதற்கு பின்பு ஜெயலலிதாவால் கட்டிகாக்கப்பட்டது. ஜெயலலிதா இருக்கும்காலத்திலேயே ஓ. பன்னீர் செல்வத்தை நம்பி கட்சிப்பொறுப்பை கொடுத்தார். ஓ. பன்னீர் செல்வம் அதற்கு விசுவாசமாக நடந்து கொண்டார். எம்ஜிஆரின் பை - லாவின் படி  தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவர்களையே அதிமுக கட்சி ஏற்றுக் கொள்ளும். , சட்டப்படி ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் சேர்ந்து கையெழுத்து போட்டால் தான் கட்சியில் எந்த முடிவையும் எடுக்க முடியும். அப்படிப்பார்த்தால் சீனியர் ஓ. பன்னீர் செல்வம் தான். அவரைத்தான் தலைமையை ஏற்கவேண்டும் என்று எடப்பாடிப்பழனிசாமி விட்டுக்கொடுக்கணும். எனிலும் இரட்டைத்தலைமை இருந்தால் கட்சி இன்னும் கட்டிக்காக்கப்படும். இப்போ கட்சியும்சின்னமும் ஓ. பன்னீர் செல்வத்திடம் தான் உள்ளது. இரண்டு பேரும்சேர்ந்து தலைமை வகித்தால் கட்சி வேற லெவலுக்கு போகும். மிகப்பெரிய சக்தி வாய்ந்த கட்சியாக அசைக்க முடியாதபடி வளரும். எனவே ஒற்றைத்தலைமையை தவிர்க்க வேண்டும். எனவும் எடப்பாடிப்பழனிசாமி தலைமையில் தொடர்ந்து தோல்வி ஏன் ? ஓ. பன்னீர் செல்வம் விட்டுகொடுத்ததால் தான் எடப்பாடிப்பழனிசாமி எதிர்க்கட்சித்தலைவரானார். அடுத்த பொதுக் குழு நீதிமன்ற உத்தரவுபடி நடக்காது. தொண்டர்கள்தான் அதிமுகவில் தலைவர்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். ஓ. பன்னீர் செல்வத்தைக்கட்சியை விட்டு நீக்க முடியாது. ஓ. பன்னீர் செல்வம்தான் எடப்பாடிப்பழனிசாமியை நீக்க முடியும். பொதுக் குழுவில் ஓ. பன்னீர் செல்வத்தை  அவமானப்படுத்தியது அராஜகமான செயல். மேடையில் வளர்மதி எம்ஜிஆர் பாட்டை பொதுக் குழுவில் தப்பாக பாடுகிறார். எடப்பாடி அடுத்த எம்ஜிஆர் இல்லை. எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. அவர் கடவுள் போன்றவர். ஒரே எம்ஜிஆர்  தான்’ என்று தெரிவித்தார் செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended