பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மன்னார்குடி
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் விளகடுப்பு வைத்து சமையல் செய்து, கேஷ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கும்மியடித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.பூபதி, ஒன்றிய தலைவர் ஆர்.வனிதாதேவி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது, கோரிக்கையினை விளக்கி மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜி.மீணாம்பிகை, ஒன்றிய துணை பெருந்தலைவர் வனிதா அருள்ராஜன், நகர தலைவர் ஜி.மல்லிகா, ஒன்றிய பொருளாளர் வைஜெயந்திமாலா, ஊராட்சி மன்ற தலைவர் சாந்திராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.