• முகப்பு
  • tamilnadu
  • மயிலாப்பூர் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை.

மயிலாப்பூர் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிருந்தாவன் நகரில் வசித்து வந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55). இவர்கள் கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகள் சுனந்தாவைப் பார்க்க சென்றுவிட்டு நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு திரும்பியுள்ளனர். இவர்களை வீட்டுக்கு அழைத்து வர நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்தின் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் டிரைவர் கிருஷ்ணா விமான நிலையம் சென்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் மகள் பெற்றோர் வீடு போய் சேர்ந்துவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள இருவரது செல்போனையும் தொடர்பு கொண்டபோது இருவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  இதனால் சந்தேகமடைந்த மகள் சுனந்தா அடையாறில் உள்ள தனது உறவினரான திவ்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே, திவ்யா தனது கணவர் ரமேஷ் உடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடு பூட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் ரத்தக்கறைகள் இருந்துள்ளது. இதனால் அதிச்சியடைந்த அவர்கள் உடனே மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீகாந்து ஈ.சி.ஆர் நெமிலிச்சேரியில் பண்ணை வீடு இருப்பதை அறிந்தனர்.  அங்கு சென்று ஆய்வு செய்தபோது வீட்டின் அருகே புதிதாக குழி தோண்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர். பின்னர் அந்த குழியை தோண்டியபோது ஸ்ரீகாந்த் மற்றும் மனைவி அனுராதா உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ஓட்டுநர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணத்துக்கு ஆசைப்பட்டு இருவரையும் மயிலாப்பூர் வீட்டில் கொலை செய்துவிட்டு ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டில் புதைத்ததையும், பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட கணவன், மனைவி உடல்களை மீட்டு மகாபலிபுரம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து நாளை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருவரது உடல்களையும் உறவினர்களிடையே ஒப்படைக்க உள்ளனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended