துப்பாக்கிச் சூட்டில் பலியான மாரியப்ப கவுண்டர், ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் :
விவசாயிகளுக்கான மின் மானியக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டில் பலியான மாரியப்ப கவுண்டர், ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர் ஆகியோர் பலியானதன் 52ஆம் ஆண்டு நினைவு நாள்.
அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கும்பகோணம் அருகே வளையப்பேட்டை மாங்குடியில் ஏராளமான விவசாயிகள் திரண்டு, அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டு, ஒன்றிய அரசு, 2020 மின் வாரிய திருத்த சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும.
மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசிற்கு துணை போக கூடாது, தமிழக அரசு, விவசாயிகள் வேளாண் மின் மானிய போராட்டத்தில் 1970 முதல் 1984 வரை பங்கேற்று உயிர் நீத்த 63 விவசாயிகளை வேளாண் தியாகிகளாக அங்கீகரித்து அவர்கள் குடும்பத்தினர் அரசு பணி வழங்கிட கோரியும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பேட்டி : சுந்தரவிமல்நாதன்
செயலாளர்
தமிழ் நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.