• முகப்பு
  • education
  • அரிச்சந்திரபுரம் நடுநிலைப் பள்ளியில் சிலம்பம் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

அரிச்சந்திரபுரம் நடுநிலைப் பள்ளியில் சிலம்பம் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Jan 31, 2023, 9:07:40 AM

திருவாரூர் மாவட்டம் அரிச்சந்திரபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்ற நிலையில் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாக சிலம்பம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவித்த நிலையில், இன்று சிலம்பம் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது இந்த பயிற்சி வகுப்பினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பம்சமாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் விதமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் ஏற்பாட்டின் பெயரில் பள்ளியில் பயிலக்கூடிய 200 மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்ட செய்தியாளர் இளவரசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended