- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ரூ2819.78 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கே.என்.நேரு அடிக்கல்.
ரூ2819.78 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கே.என்.நேரு அடிக்கல்.
மாமுஜெயக்குமார்
UPDATED: May 27, 2023, 6:49:52 PM
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவ்ஜீவன் திட்டத்தின் கீழ் உள்ள 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் உள்ள 2,306 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ2819.78 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, சாயல்குடியில் ரூ.191.90 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அரசு கூடுதல் தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை இயக்குநர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம், வேலாண்மை இயக்குநர் பா.பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ப.தெட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா,
மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம்-காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி - செ.முருகேசன், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.