மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கனிமொழி ஆய்வு.

மாரிமுத்து

UPDATED: May 28, 2023, 9:06:21 AM

இன்று (28/05/2023) தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்,

ரூபாய் 3.41 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 56 தொகுப்பு வீடுகளின் கட்டுமான பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் சுபம் தாக்கரே ஞானதேவ்ராவ், பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended