ஸ்ரீமுஷ்ணத்தில் காமராஜர் 120வது பிறந்த நாளை முன்னிட்டு அரிமா சங்கம் சார்பாக மாலை அணிவித்து அன்னதானம்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கர்மவீரர் காமராஜர் 120வது பிறந்த நாளை முன்னிட்டு அரிமா சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
பின்னர் ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்க தலைவர் சோலையப்பன் , வட்டாரத் தலைவர் கனகதரன் , மாவட்டத் தலைவர் பூவராக மூர்த்தி , மாவட்ட செயலாளர் செங்கோல் மற்றும் செயலாளர் டாக்டர் நிஷாந்த் , பொருளாளர் செந்தில் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் அரிமா சங்கம் சார்பாக வழங்கியதோடு ஒவ்வொரு கடைகளுக்கும் , பொதுமக்களுக்கும் முகக் கவசம் வழங்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.