கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் !
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு தொழில் மேம்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் 8 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பிரய்லி கை கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சார்பில் சுமார் ஏழு பயனாளிகளுக்கு முதிர்வு தொகைக்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்.