• முகப்பு
  • கல்வி
  • மாதர்பாக்கம் அருகே நேமள்ளூரில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஜெனித்தா இன்பரசிக்கு பாராட்டு விழா.

மாதர்பாக்கம் அருகே நேமள்ளூரில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஜெனித்தா இன்பரசிக்கு பாராட்டு விழா.

மகேஷ் குமார்

UPDATED: May 21, 2023, 8:30:52 AM

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை எலைட் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் ஊராட்சி என்.எஸ்.நகரை சேர்ந்த வினாயகம் - எழிலரசி தம்பதியரின் மகன் வி.ஜெனித்தா இன்பரசி.

இவர் தற்போது வெளியான 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு, 595 மதிப்பெண் பெற்று, திருவள்ளூர் மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்தார்.

மாணவி ஜெனித்தா இன்பரசியின் இந்த சாதனையை பாராட்டும் விதமாக மாணவியின் படிப்புக்கு உதவி வந்த வளர்மதி பெண்கள் இயக்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று மாணவியை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended