- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் ஜே.சி.டி. பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல்.
கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் ஜே.சி.டி. பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல்.
மேஷாக்
UPDATED: May 18, 2023, 7:00:33 PM
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் ஜே.சி.டி. பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மரக்காணம், எக்கியார் குப்பம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க ஓ.பி.எஸ்., கூறியதின் பேரில் இங்கு வந்துள்ளோம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதேபோல் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.ஒருங்கிணைப்பார் என்ற முறையில் ஓபிஎஸ் அறிக்கை கொடுத்துள்ளார்.
அரசினுடய மெத்தனப்போக்கு காரணமாகவும் மதுவிலக்கு கொள்கையில் இன்னும் சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது.
அரசு முறையான, சீரான ஒரு மதுவிலக்கு கொள்கை யை உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் நாங்கள் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு தனது அலட்சியப் போக்கை விட்டு விட்டு சரி செய்ய வேண்டும்.
உளவு, காவல்,அமலாக்கம் போன்ற துறைகளில் பணிபுரிவோரை தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்சனைகள் தீர்ந்து விடாது. மதுவிலக்கு கொள்கையில் ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும்.
மதுவிலக்கு கொள்கையில் அரசு உடனடியாக மாற்ற ங்கள் கொண்டுவர வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் கோரிக்கையை வைக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.