அது + இஷ்டம் = அதிஷ்டம்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச்சென்றார்.
அப்போது வயலில் ஒரேஒரு பெண் மட்டும் வேலை செய்துகொண்டிருந்தாள். மன்னர் அவரிடம் உன் நண்பர்கள் எல்லாம் எங்கே? எனக்கேட்டார்.
ஆனால் விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்தப்பெண், அவர்கள் எல்லாம் மன்னரைப்பார்க்க போயிருக்கிறார்கள் என்று சொன்னாள். அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை என்று கேட்டார். அதற்கு அந்தப்பெண், மன்னரைப்பார்ப்பதற்காக ஒரு நாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள்இல்லை...
எனக்கு ஐந்து குழந்தைகள். அவர்களை காப்பாற்ற வேண்டியகட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால் தான் போகவில்லை என்றாள்.
மன்னர் அவரது கையில் சில நூறு தங்க காசைக் கொடுத்துவிட்டு, உங்கள் நண்பர்களிடம்...
நீங்கள் எல்லாம் மன்னரைப்பார்க்க சென்றீர்கள்..
ஆனால் மன்னரோ என்னைப்பார்க்க வந்தார் என்று சொல்லுங்கள்... என அப்பெண்ணிடம் கூறி விட்டு சென்றார்...
***அனுபவஸ்தன்***
எதையும் தேடி செல்லாதே... உனக்கு தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும்...!!