குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாட்டில், தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டிணத்தில்
ராக்கெட் ஏவுதளத்தை இஸ்ரோ அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்த ஏவுதளத்திற்காக கடந்த மாதம் தமிழகஅரசு 2000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் கூறியுள்ளார்.
ஏவுதளத்தை அமைக்கும் முன் பாதுகாப்பு மற்றும் சூழ்நிலை தொடர்பான அனுமதிகள் பெற வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஏவுதளத்தை அமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் எனவும் இந்த தளத்தில் ஏவுதளத்தோடு ரேடார் , தரை ஸ்டேசன் , கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.