• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருநெல்வேலியில், உணவு பாதுகாப்புத்துறையின், மாவட்ட அளவிலான, காலாண்டு ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலியில், உணவு பாதுகாப்புத்துறையின், மாவட்ட அளவிலான, காலாண்டு ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: Mar 31, 2023, 12:49:18 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பல்வேறு துறை அலுவலர்கள், நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதிகள்,, உணவகங்களின் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள்- ஆகியோர் கலந்து கொண்ட, உணவு பாதுகாப்பு துறையின், "மாவட்ட அளவிலான காலாண்டு ஆலோசனை கூட்டம்", திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கா.ப. கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தின் போது, "சிறந்த காய்கறி சந்தை" (EAT RIGHT VEGETABLE MARKET) என்பதற்கான, "டெல்லி, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிறுவனம்" வழங்கிய சான்றிதழை, பாளையங்கோட்டை மகாராஜாநகர் உழவர் சந்தைக்கு, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் இரா.சசிதீபா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பூவண்ணன், மாவட்ட ஆட்சியரிடமிருந்து, பெற்றுக்கொண்டார்.

அதுபோல, "உண்ணுவதற்கு உகந்த இடம்" என்பதற்கான சான்றிதழ், கீழப்பாட்டம், படப்பக்குறிச்சி, சீவலப்பேரி ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும், ஊட்டச்சத்து மையங்களுக்கு, வழங்கப்பட்டன. அவற்றை பாளையங்கோட்டை, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா முன்னிலையில், ஊட்டச்சத்து திட்ட பணியாளர்கள பெற்றுக் கொண்டனர்.

சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியினை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறையின் மூலம், திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், மாவட்ட நியமன அலுவலர், இந்த கூட்டத்தில், விரிவாக எடுத்துரைத்தார்.

வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தயாரிப்பாளர்கள், உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆண்டறிக்கை சமர்ப்பிக்கவில்லை! என்பதற்காக விதிக்கப்படும், அபராதத்தொகையினை தள்ளுபடி செய்யவும், இனி வரக்கூடிய காலங்களில், அபராதம் விதிக்காமல் இருக்கவும், இந்த கூட்டத்தில், வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் டைட்டஸ் பெர்னாண்டோ, சங்கரலிங்கம், கிருஷ்ணன், ராமசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், செல்லப்பாண்டியன், சங்கரநாராயணன் உட்பட, பலர் இந்த கூட்டத்தில், கலந்துகொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended