• முகப்பு
  • குற்றம்
  • நாகை அடுத்த சிக்கலில் கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

நாகை அடுத்த சிக்கலில் கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

செ.சீனிவாசன்

UPDATED: May 18, 2023, 6:48:49 PM

நாகை மாவட்டம் சிக்கல் கீழவெளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் சிலர் விறகு வெட்டுவதற்காக அருகாமையில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர்.

அப்போது அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

முழுவதுமாக உடல் அழுகிய நிலையில் இருக்கும் பெண் சடலம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்திருக்கலாமென காவல்துறையினரால் கணிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை அருகே இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended