- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நெல்லிக்குப்பம் நகராட்சியில் கழிவுநீர் கலக்காத குடிநீர் கேட்டு கடிதம் எழுதிய திமுக கவுன்சிலரால் பரபரப்பு...
நெல்லிக்குப்பம் நகராட்சியில் கழிவுநீர் கலக்காத குடிநீர் கேட்டு கடிதம் எழுதிய திமுக கவுன்சிலரால் பரபரப்பு...
குமரவேல்
UPDATED: May 19, 2023, 7:30:00 PM
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக வார்டு கவுன்சிலர் சத்யா புகார் கடிதம்.
புகார் கடிதத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு குடிநீருக்காகத்தான் வரிசெலுத்தி வருகிறோம்.ஆனால் எங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.
பாதுகாக்கப்பட்ட ஆரோக்கியமான குடிநீர் என்றால் ஆபிஸ் போகலாம்.
ஆனால் நகராட்சி குடிநீர் கலந்த கழிவுநீரை குடித்து விட்டு ஆஸ்பிட்டல்தான் போகவேண்டும்!
சுத்தமான குடிநீரை கொடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம்.
ஆனால் சாக்கடை கலந்த குடிநீரை கொடுத்து பிணவரைக்கு அனுப்பவா?
நாங்கள் அருவி நீர் கேட்கவில்லை பாதுகாக்கப்பட்ட ஆரோக்கியமான குடிநீர் தானே கேட்கிறோம்!
குடி நீரா? குடி கெடுக்கும் நீரா?
நகராட்சி நிர்வாகம் இனி வரும் நாட்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுக்குமா?
அல்லது தண்ணீர் வரி கட்டும் மக்களுக்கு சவக்குழி வெட்டுமா ?
என கடிதம் எழுதியுள்ளார்.
இனியாவது நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்!?