ரேஷன்கடைகளில் கூடுதலாக ஒருகிலோ சர்க்கரை, உளுந்து விரைவில் வழங்கப்படும் - சக்கர பாணி
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இதுகுறித்து விழுப்புரத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறைஅமைச்சர் சக்கர பாணி நேற்று நிருபர்களிடம்பேசுகையில், தேர்தல்வாக்குறுதியில் சொல்லிய படி ரேஷன்கடைகள் ஒருதுறையின் கீழ் கொண்டு வரப்படும் என்றவாக்குறுதி நிறை வேற்றப்படும்.
மேலும் கூடுதலாக ஒருகிலோ சர்க்கரை, ஒருகிலோ உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப் படும்.
பயோமெட்ரிக் திட்டம் முழுமையாக நிறை வேற்றப் படாததால், இனி கண்கருவிழி மூலம் அடையாளம்காணும் முறை விரைவில் தமிழகம்முழுவதும் கொண்டு வரப்படும்.
500 டன் அரைக்கும் அரிசிஆலை 6 ம், 800 டன் அரைக்கும் ஆலை 3 ம், 200 டன் அரைக்கும் ஒருதனியார் ஆலையும் நிறுவப் படும். இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காலியிடத்தில் கூரை அமைக்கப் பட்டு அங்கு நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப் படும் என்றார்.
செய்தியாளர் பா. கணேசன்