• முகப்பு
  • district
  • பல்வேறு மாவட்டங்களில் நடந்த முக்கிய செய்திகள் 27.4.2022

பல்வேறு மாவட்டங்களில் நடந்த முக்கிய செய்திகள் 27.4.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுக்கோட்டை : அறந்தாங்கி அருகே அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும் 16 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை : மாநகர காவல்துறை, வீடற்ற மக்களுக்காகவும், சாலையோரம் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் 'காவல் கரங்கள்' என்ற இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த இயக்கத்திற்காக நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. வேலூர் : ஆம்பூரில் உள்ள மருத்துவர் பிரித்விராஜ், தன்னுடைய புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதுகுறித்து அவர், இதை வாங்கி 3 மாதங்களே ஆகிய நிலையில் 3 முறை பழுதாகிவிட்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 120-180கிமீ வரை செல்லும் என்று நிறுவனம் கூறியிருந்த நிலையில், இன்று 44கிமீ சென்று பாதியிலேயே நின்றதால் கொழுத்தினேன் என கூறினார். கரூர் மாவட்டம் : குளித்தலை அருகே 16 வயது சிறுமிக்கு பிரான்சிஸ் சேவியர் என்பவர் பாலியல் தொந்தரவு செய்தவழக்கில், கரூர் மகிளா நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மகிளா நீதிமன்ற நீதிபதி நசீமாபானு பிறப்பித்த உத்தரவில், பிரான்சிஸ் சேவியருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் இன்று தீர்ப்பளித்துள்ளார். தென்காசி : ஆட்சியர் அலுவலகத்தில் 232 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள், மாவட்ட ஆட்சியர் திரு. கோபால சுந்தரராஜ் முன்னிலையில் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் : கா. மு. சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளிகளுக்காக வழங்கப்பட்ட 3,512 பெஞ்ச் டெஸ்க் மற்றும் 240 மேஜைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர். மா. ஆர்த்தி பள்ளிகளுக்கு வழங்கினார். நீலகிரி : உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தின் சார்பாக குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருச்சி : துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. இதையடுத்து, இதில் பயணித்த பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்தனர். அப்போது 18 பயணிகளிடம் இருந்து 2.5 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இதைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை : அருகே பனையூரில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிப் பதிவுகளை கொண்டு பிரேம்குமார், அர்ஜுன் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்தது. நெல்லையில் : போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக கைதான இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. ஜெயராமன், ஸ்ரீ கண்ணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் : இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜூனத் அகமதுவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூனத் அகமதுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. கோவை : மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை குஞ்சப்பனை பகுதியில் உலாவந்த மக்னா யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் சென்னை : வண்ணாரப்பேட்டையில் டீசலை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து 700 லிட்டர் டீசலை பறிமுதல் செய்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,madurai news,karur news,dharmapuri news,virudhunagar news,chennai news,kovai news,Trichy news,nilgiri news,kanchipuram news,karur news,vellore news,pudukottai news

VIDEOS

RELATED NEWS

Recommended