• முகப்பு
  • tamilnadu
  • முக்கிய அறிவிப்பு - தமிழக போக்கு வரத்து காவல் துறை.

முக்கிய அறிவிப்பு - தமிழக போக்கு வரத்து காவல் துறை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஐம்பது நாட்களில் 2,73,284 வழக்குகளில் ரூபாய் 6 கோடியே 50 லட்சம் அபராத தொகை வசூலாகியுள்ளது - தமிழக போக்குவரத்து காவல் துறை அனைத்துவாகன ஓட்டுநர்களும் தங்கள்வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்குநிலுவையில் உள்ளதா என்பதை ஆன்லைனில்சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில்செலுத்த சென்னை போக்கு வரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சென்னை போக்கு வரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை பெரு நகர போக்கு வரத்து காவல் துறை 2018 மார்ச் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப் பட்டது. ஆரம்ப காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்தபோதிலும், சாலை விதி முறைகளைமீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால் அது காலப் போக்கில் மோச மடைந்தது. இந்தச்தேக்க நிலையை நேர் செய்ய சென்னை பெரு நகர போக்கு வரத்து காவல்துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப் படுத்த முடிவு செய்தனர். அதன் படி சென்னைபெருநகர காவல் துறை ஆணையர், திரு. சங்கர் ஜிவால், இ. கா. ப அவர்கள் கடந்த 11. 04. 2022 அன்று பத்து அழைப்பு மையங்களை திறந்து வைத்தார். அண்ணா நகர் TROZ மற்றும் போக்கு வரத்து கட்டுப் பாட்டறை ANPR கேமராமையங்கள் மூலம் பதிவு செய்யப் பட்ட வழக்குகளைக்கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித் தனி அழைப்புமையங்கள் பின்னர் சேர்க்கப் பட்டன. இந்த பனிரெண்டு காவல் அழைப்புமையங்களின் செயல் திறன் ஐம்பது நாட்கள் செயல் பாடாக 12. 04. 2022 தேதி முதல் 31. 05. 2022 தேதி வரை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. இந்த பனிரெண்டு காவல் அழைப்புமையங்களிலிருந்து தொலை பேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்கு வரத்து விதி மீறல் வழக்குகள், சம்மந்தப் பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப் பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம்செலுத்த அறிவுறுத்தப் பட்டது. தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் மெய் நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப் படும் என்று அறிவுறுத்தப் பட்டது. இந்த முயற்சியின் காரணமாக கடந்த ஐம்பது நாட்களில் 1,27,066 பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப் பட்ட பழைய வழக்குகள்) அபராதத்தொகை ரூ. 1,93,75,970/- விதி மீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப் பட்டது. இதில் அறுபத்தேழு வாகன ஓட்டிகள் நூற்றுக்கும் அதிகமான விதி மீறல்களில் ஈடுபட்டுஅபராதம் செலுத்தினார்கள். ஒரேவாகன ஓட்டி அவருடைய ஒரே வாகனத்திற்காக இரு நூற்று எழுபத்தி நான்கு விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தியது குறிப்பிடத் தக்கது. இதில் ஒருபகுதியாக, குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அழைப்புச்செய்து 1181 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 1,19,12,000/அபராதமாக வசூலிக்கப் பட்டது. இதில் பெரும்பாலனோர் சராசரியாக ரூ. 10,000/- அபராதம் செலுத்தியவர்கள். ஆகமொத்தம் 1,28,247 பழைய வழக்குகளில் ரூ. 3,12,87,920/அபராதமாக வசூலிக்கப் பட்டது. இது மட்டும் இல்லாமல் புதிய வழக்குகளுக்காக ரூ. 3,37,34,800/- அபராதமாக வசூலிக்கப் பட்டது. சென்னை பெரு நகர காவல் இந்த ஐம்பது நாட்களில் 2,73,284 வழக்குகளில் ரூ. 6,50,22,770/அபராத தொகையாக வசூலித்தது. அபராதம் செலுத்துவதற்கானவசதியை மேம்படுத்த, மொத்த எஸ். எம். எஸ் அமைப்பு, கட்டணவசதி மையம் மற்றும் கட்டணதளங்களுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை சென்னை பெருநகர போக்கு வரத்து காவல் துறை நடை முறைப் படுத்தி உள்ளது. சென்னை பெரு நகர போக்கு வரத்து காவல் துறை வழங்கும் இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, அனைத்துவாகன ஓட்டுநர்களும் தங்கள்வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில்உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, அபராதத்தொகையை விரைவில் செலுத்துமாறு அழைப்பு விடுக்கப் படுகிறது" என்று கூறி உள்ளது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended