• முகப்பு
  • district
  • ஊரக உள்ளாட்சித் தற்காலிக தேர்தல் 2022 ஐ முன்னிட்டு டாஸ்மாக்கிற்கு விடுமுறை.

ஊரக உள்ளாட்சித் தற்காலிக தேர்தல் 2022 ஐ முன்னிட்டு டாஸ்மாக்கிற்கு விடுமுறை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தற்காலிக தேர்தல் 2022, 09.07.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டும், அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 12.07.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் (6317), வி.களத்தூர்(6478) ஆகிய கடைகள் மற்றும் சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு 07.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் 09.07.2022 அன்று நடு இரவு 12.00 மணி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 12.07.2022 அன்று காரை (6432), ஆலத்தூர் (6425), பாடாலூர் (6429), செங்குணம்(6438), எளம்பலூர் (6320), உப்போடை (6323), ஆத்தூர் ரோடு (6325,6326,6319), புதிய பேருந்து நிலையம் (6309,6311,6324), அய்யலூர்(6443), சிறுவாச்சூர் (6442) வேப்பந்தட்டை (6437), கிருஷ்ணாபுரம்(6479), அன்னமங்கலம் (6450), எசனை (6439) ஆகிய அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended