அதிவேகம் ஆபத்து

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார்மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி. இது குறித்து அரவக் குறிச்சி காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். கரூர்மாவட்டம் அரவக்குறிச்சி. காவல் சரகத்துக்கு உட்பட்ட ஜங்கால் பட்டி என்ற இடத்தில் நேற்று இரவு இருசக்கரவாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியது.இந்தவிபத்தில் இரு சக்கரவாகனத்தில் சென்ற இருவர் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த சாலைவழியாகச் சென்றவர்கள் பலத்த காயமடைந்திருந்த கார்ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவ மனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி காவல்நிலையப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலங்களை மீட்டு உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனைக் கு அனுப்பி வைத்தனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended