குரூப்-2 தேர்வு ஆட்சியர் ஆய்வு .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2ஏ, தேர்வுகள் இன்று நடைபெறுவதை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள தேர்வு மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் இஆப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேர்வு சுமூகமாக நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 5 பறக்கும் படைகள், 14 சுற்று குழு அலுவலர்கள், தேர்வு நடைபெறும் 66 தேர்வு மையங்களில் 90 காவல் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்