- முகப்பு
- pondichery
- தனக்கு உண்டான மரியாதையை கொடுங்கள் , அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக அமைச்சர் ?
தனக்கு உண்டான மரியாதையை கொடுங்கள் , அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக அமைச்சர் ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான வில்லியனூர் தொகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் மனவெளி முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஒதியம்பட்டு வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மிநாராயணனும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பூஜை செய்து பணியை தொடங்கி வைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமினராயணன் பங்கேற்காத நிலையில் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தார், அப்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியிடம் தனக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்றும் தனக்கு உண்டான மரியாதை அரசு அதிகாரிகள் கொடுப்பதில்லை என்று கூறி அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் அமைச்சரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், விழாவில் கலந்துகொள்ள அழைப்புக் கொடுங்கள், அப்படி இல்லை என்றால் முறையாக அழைப்பிதழ் அடியுங்கள் என்று கூறி கடுமையாக பேசினார்.
அப்போது அருகில் இருந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க் கட்சித் தலைவருமான சிவா அமைச்சரை சமாதானப்படுத்தினார், இதனை ஏற்க மறுத்த அவர் எதிர்க்கட்சித் தலைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து சமாதானமான அமைச்சர் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
அரசு விழாவில் திடீரென்று கலந்துகொண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக அமைச்சரால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி செய்தியாளர் சக்திவேல்.பா.