• முகப்பு
  • குற்றம்
  • பாபநாசம் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு கொள்ளையன்கள்.

பாபநாசம் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு கொள்ளையன்கள்.

ஆர். தீனதயாளன் 

UPDATED: May 25, 2023, 7:49:26 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சரக்கத்துக்கு உட்பட்ட அம்மாபேட்டை ,மெலட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம்,நகை, செல் போன், பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தாளக்குடியை சேர்ந்த நாகேஷ் (20) சுரேஷ்(35 கீழ கொண்டயம்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (20)கண்ணன் (22) ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் கைது செய்யப்பட்ட நபர்களை பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended