• முகப்பு
  • crime
  • கும்பகோணம் மேயர் உள்ளிட்ட 4 பேர் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார்

கும்பகோணம் மேயர் உள்ளிட்ட 4 பேர் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக லோகநாதன் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் மகிளா காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவியாக சுபா என்பவரை நியமித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மகிளா காங்கிரஸ் தலைவியாக இருந்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த மீனாட்சி என்பவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதனை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் ஆடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதனுக்கு ஆதரவாக மேயர் சரவணன் நகர காங்கிரஸ் தலைவர் மிர்சாவுதின் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன் கும்பகோணம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சசிகுமார் உள்ளிட்ட நால்வர் பட்டீஸ்வரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து மிரட்டல் விட்டதாக மீனாட்சி பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக லோகநாதன் மகிலா காங்கிரஸ் தொண்டர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த மீனாட்சி வாட்ஸ் அப்பில் பேசி ஆடியோ வெளியிட்டிருப்பது மேலும் மேயர் உள்ளிட்ட 4 பேர் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் செய்ய செய்திருப்பது இன்று கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended