தேர்தல் விதியை மீறி வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் காங்கிரஸ் வேட்பாளர்.
ராஜ்குமார்
UPDATED: Mar 27, 2024, 9:51:33 AM
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.
Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ
காங்கிரஸ் சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?
அப்போது உடன் முன்னாள் அமைச்சர் நாசர், விஜி ராஜேந்திரன் எம்எல்ஏ, டிஜே கோவிந்தராஜன் எம்எல்ஏ, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, சுதர்சனம் எம் எல் ஏ, காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஆகிய ஆறு பேர் அடங்கிய குழு தேர்தல் விதிமுறையை மீறி மனு தாக்கல் செய்தனர்.
Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.
திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசி காந்த் செந்தில் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தும் தேர்தல் விதிமுறையை மீறி ஆறு பேர் வேட்பு மனு தாக்கல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?
இதனை கண்டுகொள்ளாத அனுமதித்தது ஏன் என்று தேர்தல் அதிகாரிகளை சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.