- முகப்பு
- குடவாசல் தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பாக அனுசரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின??
குடவாசல் தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பாக அனுசரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின??
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக குடவாசல் ஒன்றிய, நகர கழகம் சார்பாக ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் தெற்கு ஒன்றிய,நகர கழகம் சார்பாக குடவாசல் நகர அலுவலகத்திலிருந்து குடவாசல் பேருந்து நிலையம் வரை அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடவாசல் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் மன்ற இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா சுப்ரமணியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குடவாசல் நகர செயலாளர் சாமிநாதன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பாப்பா பிரதாப்போத்தன், குடவாசல் ஒன்றிய பெருந்தலைவர் கிளாரா செந்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் குருமூர்த்தி மகேந்திரன், சந்திரபோஸ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணைத் தலைவர் விக்னேஷ் குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் பிரசாத், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய துணைத்தலைவர் தமிழ்மணி உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.