• முகப்பு
  • district
  • மணப்பாறையில் இரண்டு நாட்களாக சாலையோரம் இறந்து கிடக்கும் மயில் கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்.

மணப்பாறையில் இரண்டு நாட்களாக சாலையோரம் இறந்து கிடக்கும் மயில் கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மயில்கள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் நேற்று திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டவர் கோவில் அருகே சாலையின் மையப்பகுதியில் தேசிய பறவையான மயில் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. இந்த மயில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் இறந்த நிலையில் கிடப்பது சமூக ஆர்வலர்களை வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டின் தேசிய பறவைக்கு இந்த நிலையா என்பது அனைத்து தரப்பு மக்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. வனத்துறை அதிகாரிகள் விரைந்து இறந்த மயிலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.

VIDEOS

RELATED NEWS

Recommended