- முகப்பு
- புதுச்சேரியில் கடற்கரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பேஷன் ஷோ
புதுச்சேரியில் கடற்கரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பேஷன் ஷோ
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரி :
திருநங்கைகளும் ,அழகிகளும் வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர்.
புதுச்சேரியில் முதன் முதலாக கடற்கரை திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடற்கரை திருவிழா 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக
பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகிய பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி...
2-ம் நாளான மெரினா கடற்கரையில் பட்டம் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து புதுச்சேரி ராக் கடற்கரையில் பிரபல பின்னணி நாட்டுப்புற பாடகி இசைவானியின் இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் அழகிகள் கலந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர். இதில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
இதேபோல் மெரினா கடற்கரையில் விஜய் டிவியின் புகழ் சூப்பர் சிங்கர் பின்னணி பாடகர்களான, ராஜகணபதி, அனு, ஷாம் விஷால், மற்றும் அசார் ஆகியோரின் பாடல் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் புதுச்சேரி சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு ரசித்தனர்.
இதனை தொடர்ந்து நாளை...
15 ம்தேதி, கடற்கரை சாலை லே- கபே, குபேர் அவென்யூவில் மாலை 5 மணிக்கு மூங்கில் இசைக்கருவி இசை,நாட்டுப்புற இசை,நடனமும்,இரவு 7 மணிக்கு வான் விளக்கு காட்சியும் நடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#புதுச்சேரி #fashionshow #pondicherybeach