சுகாதாரம் காக்க தவறும் திருத்தேர்வளை ஊராட்சி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Feb 14, 2023, 3:24:14 PM
இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா ஆயக்குடி அருகே உள்ள திருத் தேர்வளை ஆகாச
முத்துக்காளியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பெண்கள் கழிவறை மிகவும் மோசமான முறையில் சுத்தம் செய்யப் படாமல் உள்ளது.
அதனால் அந்த கழிவறைக்குச் செல்லும் பக்கதர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம்
நிலவுகிறது, இது குறித்து அப் பகுதி பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் பல முறை திருத்தேர்வளை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நேரில் தெரிவித்தும் திருத் தேர்வளை ஊராட்சி நிர்வாகம் பெண்கள் கழி வறையை சுத்தம் செய்யாமலும் தூய்மையாக பராமரிக்காமலும் போதிய தன்னீர் வசதி செய்து கொடுக்காமலும்
அலட்சியப் போக்குடன் கண்டு கொள்ளாமல் உள்ளது.
உடன் திருத் தேர்வளை ஊராட்சி நிர்வாகம் பெண்கள் மற்றும் பொது மக்கள் நலனையும் சுகாதாரத்தையும் காக்க கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும்.
அத்துடன் இனி வரும் நாட்களில் சுகாதாரம் மற்றும் தூய்மையாக
கழிவறை பயன்படும் படியாக செயல் பட வேண்டும் என்று பொது மக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் திருத் தேர்வளை ஊராட்சி பெண்கள் கழிவறையை உடன் சுத்தம்
செய்து செயல் பட வைக்க வேண்டும் காலதாமதம் செய்தால் இனியும் நாங்கள் பொருத்துக் கொள்ள தாயாராக இல்லை போராட்டம் நடத்த நேரிடும் என்றும் அப்பகுதி பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
திருத் தேர்வளை ஊராட்சி பெண்கள் கழிவறையை சுத்தம் செய்யுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தியாளர் கார்மேகம்.