• முகப்பு
  • அரசியல்
  • எடப்பாடி கே.பழனிச்சாமி நீடூழி வாழவும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக  வெற்றி பெற வேண்டியும் சித்ரா பௌர்ணமியை ஒட்டி சித்திரகுப்தர் ஆலயத்தில் அன்னதானம்

எடப்பாடி கே.பழனிச்சாமி நீடூழி வாழவும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக  வெற்றி பெற வேண்டியும் சித்ரா பௌர்ணமியை ஒட்டி சித்திரகுப்தர் ஆலயத்தில் அன்னதானம்

லட்சுமி காந்த்

UPDATED: May 5, 2023, 1:03:29 PM

இந்தியாவில் காஞ்சிபுரத்தில் மட்டும் ராகு கேது ஸ்தலங்களில் முதன்மையானதாக இருந்து வரும் கர்ணகி அம்பாள் உடனுறை சித்ரகுப்த சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததையொட்டியும், சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் நீடூடி வாழ்ந்து இனிவரும் தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டி மாவட்ட பொருளாளர் அப்பு (எ) வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம் ஆகியோர் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டிருந்த பொங்கல், சாம்பார் சாதம், புளியோதரை போன்ற சிற்றுண்டிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், பகுதி செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended