• முகப்பு
  • அரசியல்
  • டிடிவி தினகரன் மாயமான் என்றால் எடப்பாடி பழனிச்சாமி சண்டிக்குதிரை, சண்டி குதிரை எதற்கும் உதவாது ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்தியலிங்கம் பேட்டி.  

டிடிவி தினகரன் மாயமான் என்றால் எடப்பாடி பழனிச்சாமி சண்டிக்குதிரை, சண்டி குதிரை எதற்கும் உதவாது ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்தியலிங்கம் பேட்டி.  

லியோ

UPDATED: May 12, 2023, 8:50:43 AM

தஞ்சாவூர் தமிழ்நாடு ஓட்டலில் அதிமுக ஓபிஎஸ் அணி ஆதரவாளதும் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ ஆர்.வைத்திலிங்கம் காலை திடீர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசும்போது:-

நாங்கள் தான் ஓபிஎஸ், டிடிவி சந்திக்க சொன்னோம். முதல் முறை சந்திக்கும் கூட்டம் என்பதால் அப்போது கூட்டமாக சென்று சந்திக்க வேண்டாம் என்பதற்காகத் தான் ஓபிஎஸ்ஐ மற்றும் தனியாக சென்று சந்திக்க சொன்னோம் என்று வைத்தியலிங்கம் பேட்டியில் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், டிடிவி தினகரன் அவர்களை நாங்கள் தான் ஓபிஎஸ் அனுப்பி சந்திக்க சொன்னோம். முதல் முறை சந்திக்கும் போது கூட்டமாக சென்று சந்திக்க வேண்டாம் என்பதற்காகத் தான் ஓபிஎஸ், பெரியவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை தனியாக சென்று சந்திக்க சொன்னோம்.

அந்த சந்திப்பு நடைபெற்ற போது நான் செல்லாமல் இருந்தது குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஏதோ கற்பனையில் பேசி வருகிறார். மாயமான் மற்றும் மண் குதிரை சந்திப்பதால் இன்றும் ஆகிவிட முடியாது என கூறியிருக்கிறார்.

அந்த மாயமான் இல்லையென்றால் அவர் முதலமைச்சர் ஆக இருக்க முடியாது, அண்ணா திமுகவை எடப்பாடி பழனிச்சாமி தனது சொத்தாக்கு விரும்புகிறார் அது ஒருபோதும் நடைபெறாது.

டிடிவி தினகரன் மாயமான் என்றால் எடப்பாடி பழனிச்சாமி சண்டிக்குதிரை, சண்டி குதிரை எதற்கும் உதவாது. ஓபிஎஸ், டிடிவி சசிகலாவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் ஒருபோதும் அண்ணா திமுக ஆட்சிக்கு வர முடியாது.

ஓபிஎஸ் டிடிவி சந்திப்பை 95 சதவீத அண்ணா திமுக தொண்டர்கள் வரவேற்கிறார்கள். நாங்கள் தான் ஓபிஎஸ் டிடிவி சந்திக்க சொன்னோம் முதல் முறை சந்திக்கும் போது கூட்டமாக சென்று சந்திக்க வேண்டாம் என்பதற்காகத் தான் ஓபிஎஸ்ஐ மற்றும் தனியாக சென்று சந்திக்க சொன்னோம்.

அதிமுக வலுமை பெற வேண்டும் ஒற்றுமைப்பட வேண்டும் ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு என்று நாங்கள் சிந்திக்கின்றோம். ஆனால் காலில் விழுந்து முதலமைச்சராகி பழனிச்சாமி சுய லாபத்தால் பதவி மோகத்தால் இந்த கட்சியை அழிக்க நினைக்கின்றார்.

ஓநாய்கள் கட்சியை விட்டு வெளியே யாரும் போகாதபடி பாதுகாக்கிறது அந்த ஓநாய்களை ஏமாற்றி விட்டு ஆட்டுக்குட்டிகள் வெளியே வரும்.

நிச்சயமாக சசிகலாவை ஓபிஎஸ் சந்திப்பார், எடப்பாடி அணியில் இருப்பவர்கள் கட்சி ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்கள் இன்றும் அவர் எங்களிடம் பேசி வருகிறார்கள் அது நிச்சயம் நடைபெறும்.

மிக விரைவில் கொங்கு மண்டலத்தில் திருச்சி மாநாட்டை விட மிகச் சிறப்பாக அதிக கூட்டத்தை கூட்டி மாநாடு நடத்துவோம் என்று வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended