- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கோவில்பட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் மின் மோட்டார் மீண்டும் சீர் செய்யப்பட்டு குடிநீர் வினியோகம்.
கோவில்பட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் மின் மோட்டார் மீண்டும் சீர் செய்யப்பட்டு குடிநீர் வினியோகம்.
மாரிமுத்து
UPDATED: May 9, 2023, 7:24:46 PM
கோவில்பட்டி நகருக்கு குடிநீர் தரும் சீவலப்பேரியில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் 3 மின் மோட்டார்கள் பழுதான நிலையில் 1 புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டு, அந்த மின் மோட்டார் செயல்பட தொடங்கி உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் புதிய மின் மோட்டார் செயல்பட்டினை நகர் மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளனர்.
புதிய மின் மோட்டார் செயல்பட தொடங்கி உள்ளதால் 10.5.2023 முதல் படி படியாக குடிநீர் விநியோகம் சரி செய்யப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் கூறியுள்ளனர்..